யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் சென்னை நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பரீட்சார்த்த பயணிகள் கப்பல் சேவை நாளை இடம்பெறவுள்ளது.
நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று நாளையதினம்(06) வருகை தரவுள்ளது.
இதில் பயணிகள் எவரும் வருகை தரமாட்டார்கள் மாலுமி மற்றும் கப்பல் சேவையை பரிசோதிப்பவர்களே குறித்த கப்பலில் வருகை தருவர்.
கப்பல் சேவைக்கான ஒழுங்குகள் அனைத்தும் சரியாக நடைபெற்றால் அடுத்துவரும் இரு தினங்களும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பரீட்சார்த்த நடவடிக்கை அனைத்தும் சரியான முறையில் நடைபெற்றால் எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகுமென தெரிவிக்கப்படுகின்றது.
குதூகலத்தில் யாழ் மக்கள். ஆரம்பமாகவுள்ள காங்கேசன்துறை-நாகபட்டினம் கப்பல் சேவை.samugammedia யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கும் சென்னை நாகப்பட்டினத்திற்கும் இடையிலான பரீட்சார்த்த பயணிகள் கப்பல் சேவை நாளை இடம்பெறவுள்ளது.நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று நாளையதினம்(06) வருகை தரவுள்ளது.இதில் பயணிகள் எவரும் வருகை தரமாட்டார்கள் மாலுமி மற்றும் கப்பல் சேவையை பரிசோதிப்பவர்களே குறித்த கப்பலில் வருகை தருவர்.கப்பல் சேவைக்கான ஒழுங்குகள் அனைத்தும் சரியாக நடைபெற்றால் அடுத்துவரும் இரு தினங்களும் பரீட்சார்த்த நடவடிக்கை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.பரீட்சார்த்த நடவடிக்கை அனைத்தும் சரியான முறையில் நடைபெற்றால் எதிர்வரும் 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறைக்கும் நாகபட்டினத்திற்குமான பயணிகள் கப்பல் சேவை ஆரம்பமாகுமென தெரிவிக்கப்படுகின்றது.