• Sep 21 2024

கைவேலி 1ஆம் வட்டாரமக்கள் வெள்ளத்தில் - பிரதேசசபை அசமந்தபோக்கு – குற்றம் சுமத்தும் மக்கள்!

Tamil nila / Feb 2nd 2023, 6:10 pm
image

Advertisement

தற்போது பெய்து வருகின்ற அடைமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு 

கைவேலி 1ஆம் வட்டார மக்களின் குடியிருப்பு பகுதியில் பாரிய வெள்ளம் தேங்கி நிற்பதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.


அதிகளவான வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் அன்றாட போக்குவரத்தை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.



இந்த அசொகரியங்களை நிவர்த்தி செய்யுமாறு பல தடவைகள் பிரதேசசபைக்கு தெரியப்படுத்திய போதும் இதுவரை எந் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.


எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் 

பிரதேச சபையின் அசமந்த போக்குகள் நிச்சயமாக மக்களின் வாக்குகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கைவேலி 1ஆம் வட்டாரமக்கள் வெள்ளத்தில் - பிரதேசசபை அசமந்தபோக்கு – குற்றம் சுமத்தும் மக்கள் தற்போது பெய்து வருகின்ற அடைமழை காரணமாக முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு கைவேலி 1ஆம் வட்டார மக்களின் குடியிருப்பு பகுதியில் பாரிய வெள்ளம் தேங்கி நிற்பதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.அதிகளவான வெள்ள நீர் தேங்கியுள்ளதாகவும் இதனால் அன்றாட போக்குவரத்தை மேற்கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.இந்த அசொகரியங்களை நிவர்த்தி செய்யுமாறு பல தடவைகள் பிரதேசசபைக்கு தெரியப்படுத்திய போதும் இதுவரை எந் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளார்.எதிர்வரும் மார்ச் மாதம் 09ஆம் திகதி உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதேச சபையின் அசமந்த போக்குகள் நிச்சயமாக மக்களின் வாக்குகளில் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement