• Jul 03 2024

கொள்கை வேறு, கோட்டை வேறு, ஆனாலும் அஞ்சலிகள்...!சம்பந்தனின் மறைவுக்கு அமைச்சர் டக்ளஸ் இரங்கல்...!

Sharmi / Jul 1st 2024, 11:59 am
image

Advertisement

கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர் சம்பந்தன் எம்.பி என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வயதில் எமக்கு மூத்தவர்.

கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர்.

முரண்பாடுகள் இருப்பினும் காணும் பொழுதுகளில் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதுண்டு.

வயது மூப்பின் காரணமாக அவர் மரணித்திருந்தாலும் அச்செய்தி துயரை தந்துள்ளது.

அவரது இழப்பில் துயருறும் சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன். அஞ்சலி மரியாதை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



கொள்கை வேறு, கோட்டை வேறு, ஆனாலும் அஞ்சலிகள்.சம்பந்தனின் மறைவுக்கு அமைச்சர் டக்ளஸ் இரங்கல். கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர் சம்பந்தன் எம்.பி என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரங்கல் தெரிவித்துள்ளார்.தமிழரசு கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வெளியிட்ட இரங்கல் அறிக்கையிலேயே அவர் இவ்வாறு  குறிப்பிட்டுள்ளார்.தமிழரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் வயதில் எமக்கு மூத்தவர்.கொள்கை வேறு, கோட்டை வேறாக இருப்பினும் அரசியல் தளத்தில் எம்முடனும் சம காலத்தில் பயணித்தவர்.முரண்பாடுகள் இருப்பினும் காணும் பொழுதுகளில் அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதுண்டு.வயது மூப்பின் காரணமாக அவர் மரணித்திருந்தாலும் அச்செய்தி துயரை தந்துள்ளது. அவரது இழப்பில் துயருறும் சகலருக்கும் ஆறுதல் கூறுகின்றேன். அஞ்சலி மரியாதை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement