திருகோணமலை -சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சிறி மங்களபுர பகுதியிலுள்ள வயல் பகுதியில் யானையொன்று உயிரிழந்த நிலையில் காணப்படுகின்றது.
இந்த யானை நேற்று(30) உயிரிழந்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த யானையின் தோல் பகுதியில் காயமொன்று காணப்படுகின்றது.
எனினும் குறித்த யானை எவ்வாறு உயிரிழந்தது என இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் உயிரிழந்த யானையானது தற்போது அவ்விடத்திலே காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை சேருநுவர வனஜீவராசிகள் அதிகாரிகளால் முன்னெடுக்கப்படுகின்றது.