இலங்கையின் பல பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான மரக்கறிகள் மொத்த விலையில் 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
மலையகப் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால்இ சந்தையில் மரக்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.
குறிப்பாக நேற்றையதினம் (05) தம்புள்ளை சந்தைக்கு சுமார் 10 இலட்சம் கிலோ மரக்கறிகள் கிடைத்துள்ளதுடன் மொத்த கொள்வனவு செய்பவர்களின் வருகை சுமார் 50 வீதத்தால் குறைந்து மரக்கறிகளின் மொத்த விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறெனினும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை. மக்கள் அவதி.samugammedia இலங்கையின் பல பகுதிகளிலும் பலத்த மழை காரணமாக மரக்கறிகளின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் 70 சதவீதம் உயர்ந்துள்ளதாக பொருளாதார மத்திய நிலையங்கள் தெரிவிக்கின்றன.பெரும்பாலான மரக்கறிகள் மொத்த விலையில் 300 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.மலையகப் பகுதிகளில் தற்போது கன மழை பெய்து வருவதால்இ சந்தையில் மரக்கறிகளின் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.குறிப்பாக நேற்றையதினம் (05) தம்புள்ளை சந்தைக்கு சுமார் 10 இலட்சம் கிலோ மரக்கறிகள் கிடைத்துள்ளதுடன் மொத்த கொள்வனவு செய்பவர்களின் வருகை சுமார் 50 வீதத்தால் குறைந்து மரக்கறிகளின் மொத்த விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தின் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.எவ்வாறெனினும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் மரக்கறிகளின் விலை இயல்பு நிலைக்குத் திரும்பும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.