மக்கள் ஆணை இல்லாத ரணில் ராஜபக்ச அரசாங்கம் தேர்தலுக்கான நிகழ்ச்சி நிரல்களை தயாரிக்கும் போது மீண்டும் இனவாதத்தை கொண்டு வர முயற்சிப்பது போல் தெரிகின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே நளின் பண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதற்கு முன்னர் இனவாதத்தை அரசியலுக்கு பயன்படுத்தவில்லை எனவும், ஆனால் ரணில் ராஜபக்ஷ ஒருமுகமாக இருந்து ஜனாதிபதிக்கு இனவாத திரையை இழுக்க முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் நளின் பண்டார தெரிவித்தார்.
மேலும் கருத்துத் தெரிவித்த நளின் பண்டார, எதிர்க்கட்சித் தலைவர் டீல் அரசியலில் ஈடுபடாததால், ராஜபக்ஷ மக்களையும், அரசாங்கத்தையும் நேரடியாகத் தாக்க முடியும் என்றும், இது நாட்டு மக்களுக்கு தெளிவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.