இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மாவட்டத்திற்குட்பட்ட யவத் கிராம பகுதியிலுள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. .
பொலிஸ் விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து , பொலிசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தொடர்ந்தும் ஆற்றில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர்.
அதன் போது நேற்றைய தினம் மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர்கள் மோகன் உத்தம் பவார் (50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என தெரியவந்துள்ளது.
மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அந்த பெண்ணுடன் சென்றுவிட்டதால், அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என தெரியவந்துள்ளது.
மகன் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்து மோகன் உத்தம் பவார் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தார்களா? அல்லது யாராலும் மிரட்டப்பட்டதால் இந்த துயர முடிவை எடுத்தார்களா? என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பொலிசார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று தெரிய வருவதாகவும் இருப்பினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மகனின் திருமணத்திற்கு எதிர்ப்பு: குடும்பத்தினர் எடுத்த விபரீத முடிவு இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிர மாநிலத்தில் புனே மாவட்டத்திற்குட்பட்ட யவத் கிராம பகுதியிலுள்ள பீமா ஆற்றில் நேற்று முன்தினம் உடல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அடுத்த சில மணி நேரங்களில் அதே பகுதியில் இருந்து மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. . பொலிஸ் விசாரணையில் பிணமாக மீட்கப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து , பொலிசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் தொடர்ந்தும் ஆற்றில் தேடுதல் வேட்டையை மேற்கொண்டுள்ளனர். அதன் போது நேற்றைய தினம் மேலும் சில உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சடலமாக மீட்கப்பட்டவர்கள் மோகன் உத்தம் பவார் (50), அவரது மனைவி சங்கீதா பவார் (45), மகள் ராணி (27), மருமகன் சாம்ராவ் பண்டித் (32), பேரப்பிள்ளைகள் ரிதேஷ் (7), சோட்டு சாம்ராவ் (5), கிருஷ்ணா (3) என தெரியவந்துள்ளது.மோகன் உத்தம் பவாரின் மகன் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டுள்ளார். அவர் அந்த பெண்ணுடன் சென்றுவிட்டதால், அந்த குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர் என தெரியவந்துள்ளது. மகன் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்து மோகன் உத்தம் பவார் குடும்பத்தினர் தற்கொலை முடிவை எடுத்தார்களா அல்லது யாராலும் மிரட்டப்பட்டதால் இந்த துயர முடிவை எடுத்தார்களா என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் பொலிசார் கூறுகையில், முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை என்று தெரிய வருவதாகவும் இருப்பினும் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.