திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்வனர்த்தம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் இருந்து வயலுக்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் கோமரங்கடவல - அடம்பன பகுதியைச் சேர்ந்த அக்குறாலகே செனவிரத்ன (65வயது) எனவும் தெரிய வருகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு பேர் யானையின் தாக்குதலினால் குறித்த பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்
தற்போது காட்டு யானையின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
திருமலையில் வயலுக்கு சென்று கொண்டிருந்த வயோதிபருக்கு நேர்ந்த சோகம். samugammedia திருகோணமலை - கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் யானையின் தாக்குதலினால் வயோதிபரொருவர் உயிரிழந்துள்ளார். இவ்வனர்த்தம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளது.வீட்டில் இருந்து வயலுக்கு சென்று கொண்டிருந்த போது யானை தாக்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் கோமரங்கடவல - அடம்பன பகுதியைச் சேர்ந்த அக்குறாலகே செனவிரத்ன (65வயது) எனவும் தெரிய வருகின்றது.உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.கடந்த ஒரு மாதத்திற்குள் நான்கு பேர் யானையின் தாக்குதலினால் குறித்த பிரதேசத்தில் உயிரிழந்துள்ளதாகவும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர் தற்போது காட்டு யானையின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.