• May 17 2024

மிருகங்களை வேட்டையாட புதைக்கப்பட்டிருந்த ஹக்கப் பட்டாசை மிதித்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம்..! samugammedia

Chithra / Oct 11th 2023, 10:24 am
image

Advertisement


அலதெனிய பொல் அத்துவிலுள்ள வீதிக்கு அருகில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக புதைக்கப்பட்டிருந்த ஹக்கப்பட்டாசை மிதித்த 15 வயதான சிறுவன், அக்கப்பட்டாசு வெடித்தமையால் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போத்தல் என்று நினைத்தே ஹக்கப்பட்டாசை அச்சிறுவன் மிதித்துள்ளதாக பொலிஸார தெரிவித்தனர்.

ஹக்கப்பட்டாசை புதைத்ததாகக் கூறப்படும் ஒருவரை அலதெனிய பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட 27 வயதான சந்தேகநபர்,   விலங்குகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்கள், பட்டாசு மற்றும் இரும்பு குண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்​தேகநபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, இராணுவத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த 25 வயதான இளைஞனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ​பொலிஸார் தெரிவித்தனர்.

மிருகங்களை வேட்டையாட புதைக்கப்பட்டிருந்த ஹக்கப் பட்டாசை மிதித்த சிறுவனுக்கு ஏற்பட்ட சோகம். samugammedia அலதெனிய பொல் அத்துவிலுள்ள வீதிக்கு அருகில் மிருகங்களை வேட்டையாடுவதற்காக புதைக்கப்பட்டிருந்த ஹக்கப்பட்டாசை மிதித்த 15 வயதான சிறுவன், அக்கப்பட்டாசு வெடித்தமையால் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.போத்தல் என்று நினைத்தே ஹக்கப்பட்டாசை அச்சிறுவன் மிதித்துள்ளதாக பொலிஸார தெரிவித்தனர்.ஹக்கப்பட்டாசை புதைத்ததாகக் கூறப்படும் ஒருவரை அலதெனிய பொலிஸார்  கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட 27 வயதான சந்தேகநபர்,   விலங்குகளை வேட்டையாடுவதற்காக வீட்டில் மறைத்து வைத்திருந்த வெடிப்பொருட்கள், பட்டாசு மற்றும் இரும்பு குண்டுகள் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.சந்​தேகநபரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்திய போது, இராணுவத்தில் இருந்து தப்பியோடி தலைமறைவாகியிருந்த 25 வயதான இளைஞனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று ​பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement