• Oct 04 2024

யாழில் கோடிக்கணக்கில் வெளிநாட்டுப் பிரஜையிடம் பணத்தை பறித்த திருடர்கள் கைது

Chithra / Oct 3rd 2024, 12:27 pm
image

Advertisement

  

யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளனர் 

சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து நேற்றைய தினம்  இந்த இந்த துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது 

காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின்  ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் பணம், கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழுள்ள பொலிஸ் குழுவினர் ஊரெழுப்பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.

பணத்தை பறி கொடுத்தவர் சேந்தாங்குளம் பகுதியில் காணியை விற்றுவிட்டு  தனது  வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

சந்தேகநபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழில் கோடிக்கணக்கில் வெளிநாட்டுப் பிரஜையிடம் பணத்தை பறித்த திருடர்கள் கைது   யாழில் வெளிநாட்டுப் பிரஜையின் பணத்தை கொள்ளையிட்டவர்கள் பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளனர் சண்டிலிப்பாய் பகுதியில் வைத்து நேற்றைய தினம்  இந்த இந்த துணிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது காணியை விற்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த வெளிநாட்டு பிரஜையின்  ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் பணம், கைத்தொலைபேசி, மற்றும் கடவுச்சீட்டு என்பன கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகநபர்கள் இருவரை கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரியின் கீழுள்ள பொலிஸ் குழுவினர் ஊரெழுப்பகுதியில் வைத்து அதிரடியாக கைது செய்துள்ளனர்.பணத்தை பறி கொடுத்தவர் சேந்தாங்குளம் பகுதியில் காணியை விற்றுவிட்டு  தனது  வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சந்தேகநபர்களையும் சான்று பொருட்களையும் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement