• May 19 2024

யாழிலுள்ள உணவகத்தில் உணவருந்த சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Chithra / Dec 31st 2023, 8:16 am
image

Advertisement

 


யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் உணவருந்த சென்றவர்கள் உணவுக்குள் பிளாஸ்டிக் கட்டையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

நேற்று சனிக்கிழமை(30) இரவு உணவருந்த சென்றவர்களுக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.

குறித்த உணவகத்தின் செயலை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாழ் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விரைந்து செயற்பட்டு உணவுகளின் சுகாதாரம் தரம் என்பவற்றில் அக்கறை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

யாழிலுள்ள உணவகத்தில் உணவருந்த சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி.  யாழ்ப்பாணம் ஐந்துசந்திப் பகுதியிலுள்ள உணவகமொன்றில் உணவருந்த சென்றவர்கள் உணவுக்குள் பிளாஸ்டிக் கட்டையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.நேற்று சனிக்கிழமை(30) இரவு உணவருந்த சென்றவர்களுக்கே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இது தொடர்பில் உணவக நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோதும் பொறுப்பான பதில் எதுவும் வழங்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் கவலை தெரிவித்தனர்.குறித்த உணவகத்தின் செயலை விமர்சித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.இது தொடர்பில் யாழ் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் விரைந்து செயற்பட்டு உணவுகளின் சுகாதாரம் தரம் என்பவற்றில் அக்கறை செலுத்துமாறு கோரப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement