• May 07 2024

மொட்டுக் கட்சி மாநாட்டுக்கு சென்றவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்...!முக்கிய தேரர் கோரிக்கை...!samugammedia

Sharmi / Dec 18th 2023, 11:46 am
image

Advertisement

மொட்டுக் கட்சி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மனநிலைக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என மிஹிந்தலை விகாரையின் விகாராதிபதி வலவாஹேனுனவே தம் மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொலைக் கலாசாரம் என்பது ராஜபக்ச குடும்பத்துக்கு புதிய விடயமல்ல. மொட்டுக் கட்சி மாநாட்டு உரை இதனையே வெளிப்படுத்துகிறது.

எம்மீது கல்வீச்சுதாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது பற்றி பஸில் ராஜபக்ச தனது உரையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். 

எவராவது ஒருவர் தலைதூக்கினால் அவரை சாட்சியமின்றி கொன்று புதைத்தனர். நாட்டின் பொருளாதாரத்தைப் படுகொலை செய்தனர். இந்தக் கலாசாரத்தை அவர்களுக்கு மீண்டும் வழங்குவதா?

நாட்டு மக்கள் திண்டாடும் நிலையில், மனச் சாட்சி உள்ள எவரும் மொட்டுக்கட்சி மாநாட்டுக்கு சென்றிருக்கமாட்டார்கள். மொட்டுக் கட்சி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மனநிலைக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

மொட்டுக் கட்சி மாநாட்டுக்கு சென்றவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும்.முக்கிய தேரர் கோரிக்கை.samugammedia மொட்டுக் கட்சி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மனநிலைக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என மிஹிந்தலை விகாரையின் விகாராதிபதி வலவாஹேனுனவே தம் மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,கொலைக் கலாசாரம் என்பது ராஜபக்ச குடும்பத்துக்கு புதிய விடயமல்ல. மொட்டுக் கட்சி மாநாட்டு உரை இதனையே வெளிப்படுத்துகிறது.எம்மீது கல்வீச்சுதாக்குதல் நடத்தினால் என்ன நடக்கும் என்பது பற்றி பஸில் ராஜபக்ச தனது உரையில் எச்சரிக்கை விடுத்திருந்தார். எவராவது ஒருவர் தலைதூக்கினால் அவரை சாட்சியமின்றி கொன்று புதைத்தனர். நாட்டின் பொருளாதாரத்தைப் படுகொலை செய்தனர். இந்தக் கலாசாரத்தை அவர்களுக்கு மீண்டும் வழங்குவதாநாட்டு மக்கள் திண்டாடும் நிலையில், மனச் சாட்சி உள்ள எவரும் மொட்டுக்கட்சி மாநாட்டுக்கு சென்றிருக்கமாட்டார்கள். மொட்டுக் கட்சி மாநாட்டில் பங்கேற்றவர்களின் மனநிலைக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement