வெலிகம - பொல்வத்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
வெலிகம - பொல்வத்த புகையிரத கடவையில் இன்று காலை 6:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டியின் சாரதி, தெலிஜ்ஜவில, அதிகாரவிலாகம, கிரிமதிமுல்ல பகுதியைச் சேர்ந்த விதானகே தம்மிக்க தேசப்பிரிய (38) என்பவெரென தெரியவந்துள்ளது.
இந்த முச்சக்கரவண்டியானது தொடரூந்து கடவையில் உள்ள ஒலி, ஒளி எச்சரிக்கை சமிக்ஞையை கடைபிடிக்காமல் பயணித்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ரயிலுடன் முச்சக்கரவண்டி மோதி கோர விபத்து - சம்பவ இடத்திலேயே சாரதி பலி வெலிகம - பொல்வத்த பகுதியில் முச்சக்கர வண்டியொன்று ரயிலுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் அதன் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த மேலும் ஒருவர் படுகாயமடைந்து மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெலிகம காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.வெலிகம - பொல்வத்த புகையிரத கடவையில் இன்று காலை 6:30 அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் உயிரிழந்த முச்சக்கரவண்டியின் சாரதி, தெலிஜ்ஜவில, அதிகாரவிலாகம, கிரிமதிமுல்ல பகுதியைச் சேர்ந்த விதானகே தம்மிக்க தேசப்பிரிய (38) என்பவெரென தெரியவந்துள்ளது.இந்த முச்சக்கரவண்டியானது தொடரூந்து கடவையில் உள்ள ஒலி, ஒளி எச்சரிக்கை சமிக்ஞையை கடைபிடிக்காமல் பயணித்ததால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சம்பவம் தொடர்பில் வெலிகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.