• May 17 2024

இன்று இரவு இடியுடன் கூடிய மழை; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை! samugammedia

Tamil nila / Apr 8th 2023, 8:54 pm
image

Advertisement

நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு இடியடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று (08) இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் நாளை (09) மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்று இரவு இடியுடன் கூடிய மழை; விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை samugammedia நாட்டின் பல பகுதிகளில் இன்று இரவு இடியடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் இன்று (08) இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.சில இடங்களில் 50 மில்லி மீற்றருக்கும் மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் நாளை (09) மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement