பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே யாழ்ப்பாணம் மறை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
அவருடைய வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி இந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் மறை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
யாகப்பர் ஆலய திருவிழாவில் அவர் கலந்து கொள்ளவுள்ளதுடன், தொடர்சியாக யாழ் மாவட்டத்தில் பல்வேறுபட்ட இடங்களிற்கு சென்று கத்தோலிக்க அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள வத்திக்கானின் முக்கிய பிரதிநிதி.samugammedia பாப்பரசரின் இலங்கைக்கான பிரதிநிதி கர்தினால் பிறைன் உடக்குவே யாழ்ப்பாணம் மறை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். அவருடைய வருகையை முன்னிட்டு சிறப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வத்திக்கானின் இலங்கைக்கான பிரதிநிதி இந்த மாதம் 25 ஆம் திகதி யாழ்ப்பாணம் மறை மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். யாகப்பர் ஆலய திருவிழாவில் அவர் கலந்து கொள்ளவுள்ளதுடன், தொடர்சியாக யாழ் மாவட்டத்தில் பல்வேறுபட்ட இடங்களிற்கு சென்று கத்தோலிக்க அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்களையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவித்தார்.