• May 20 2024

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு! samugammedia

Chithra / Jun 3rd 2023, 1:58 pm
image

Advertisement

அனுராதபுரம், சாலியவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

புத்தளம் - திருகோணமலை A12 வீதியில் சாலியவெவ பகுதியில் அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கன்டெய்னர் ட்ரக்கை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் பயணித்த கெப் வண்டியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் நொச்சியாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் 21 மற்றும் 22 வயதுடைய திம்பிரிகஸ்கடுவ மற்றும் ஹொரேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

சடலங்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அனுராதபுரத்தில் இடம்பெற்ற கோர விபத்து; இரு இளைஞர்கள் உயிரிழப்பு samugammedia அனுராதபுரம், சாலியவெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.புத்தளம் - திருகோணமலை A12 வீதியில் சாலியவெவ பகுதியில் அனுராதபுரம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் கன்டெய்னர் ட்ரக்கை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர் திசையில் பயணித்த கெப் வண்டியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் நொச்சியாகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் 21 மற்றும் 22 வயதுடைய திம்பிரிகஸ்கடுவ மற்றும் ஹொரேகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.சடலங்கள் நொச்சியாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று புத்தளம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.சாலியவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement