நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (17) காலை குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
நானு ஓயாவில் இருந்து ஹட்டன் நோக்கி பயணம் மேற்கொண்டு மிகவும் சரிவான ரதல்ல குறுக்கு வீதியில் அபாயகரமான வளைவில் முச் சக்கரவண்டிச் சாரதிக்கு முச்சக்கரவண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததன் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக முதற் கட்ட விசாரணைகளை மேற்கொள்ளும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.