காவல்துறையினரின் சமிக்ஞைகளை மீறி, டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்தி கைதான 19 வயதுடைய யுவதிகள் மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மருதானை பகுதியில் அதிக வேகத்துடன் குறித்த யுவதிகள் பயணித்த போது நிறுத்துமாறு காவல்துறையினர் சமிக்ஞை செய்துள்ளனர்.
எனினும் அதனை செலுத்திய யுவதி, காவல் துறையினரின் சமிக்ஞையை பொருட்படுத்தாது வாகனத்தை செலுத்தியுள்ளார்.
பின்னர் காவல்துறையினர் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் சுற்றிவளைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த டிபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய யுவதி விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போது காவல்துறையினரிடம் அந்த யுவதி சொல்லாடலில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர் வாகனத்தை செலுத்தியவரும் அவரோடு பயணித்த இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட யுவதிகள் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு, பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவர்கள் நாவல மற்றும் கொழும்பை சேர்ந்தவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.
பொலிஸாருக்கே தண்ணி காட்டிய 19 வயது யுவதிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia காவல்துறையினரின் சமிக்ஞைகளை மீறி, டிபெண்டர் ரக வாகனத்தை கவனமின்றி ஆபத்தான முறையில் செலுத்தி கைதான 19 வயதுடைய யுவதிகள் மூவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மருதானை பகுதியில் அதிக வேகத்துடன் குறித்த யுவதிகள் பயணித்த போது நிறுத்துமாறு காவல்துறையினர் சமிக்ஞை செய்துள்ளனர்.எனினும் அதனை செலுத்திய யுவதி, காவல் துறையினரின் சமிக்ஞையை பொருட்படுத்தாது வாகனத்தை செலுத்தியுள்ளார்.பின்னர் காவல்துறையினர் ஏனைய அவசர சேவைகளுக்கு அறிவித்தமையை தொடர்ந்து பிரிதொரு இடத்தில் வாகனம் சுற்றிவளைக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து குறித்த டிபெண்டர் ரக வாகனத்தை செலுத்திய யுவதி விசாரணைகளை மேற்கொள்ள முயற்சித்த போது காவல்துறையினரிடம் அந்த யுவதி சொல்லாடலில் ஈடுபட்டுள்ளார்.பின்னர் வாகனத்தை செலுத்தியவரும் அவரோடு பயணித்த இருவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட யுவதிகள் கொழும்பில் வசிப்பவர்கள் என்பதோடு, பிரபல மகளிர் பாடசாலைகளில் கல்வி கற்றவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவர்கள் நாவல மற்றும் கொழும்பை சேர்ந்தவர்கள் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.