வெள்ளவத்தை மரைன்டிரைவ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காருடன், எதிரே வந்த காரொன்று மோதியதை தொடர்ந்து லொறியொன்றுடனும் மோதியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் காரை செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- ஒருவர் படுகாயம் samugammedia வெள்ளவத்தை மரைன்டிரைவ் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை 7.35 மணியளவில் இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொழும்பிலிருந்து காலி நோக்கி பயணித்த காருடன், எதிரே வந்த காரொன்று மோதியதை தொடர்ந்து லொறியொன்றுடனும் மோதியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.மேலும் தெமட்டகொடை பகுதியை சேர்ந்த 31 வயதுடைய நபர் பலத்த காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.மதுபோதையில் காரை செலுத்தியதன் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.