• May 12 2024

கொழும்பில் இருந்து மரண வீட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு..!

Chithra / Apr 7th 2024, 9:39 am
image

Advertisement

 

கெபித்திகொல்லேவ - கோலிபெந்த ஏரியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 58 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் மற்றுமொரு குழுவினருடன் வீட்டிற்கு அருகில் உள்ள ஏரியில் நீராடச் சென்றுள்ளனர்.

இதன்போது நான்கு பேர் ஏரியில் மூழ்கிய நிலையில், இருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இறுதி ஊர்வலத்தின் போது மது அருந்திவிட்டு ஏரியில் குளிக்கச் சென்றது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பில் இருந்து மரண வீட்டிற்கு சென்ற இருவர் உயிரிழப்பு.  கெபித்திகொல்லேவ - கோலிபெந்த ஏரியில் நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை பிரதேசத்தில் வசிக்கும் 58 மற்றும் 38 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.கெபித்திகொல்லேவ பிரதேசத்தில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பின்னர் மற்றுமொரு குழுவினருடன் வீட்டிற்கு அருகில் உள்ள ஏரியில் நீராடச் சென்றுள்ளனர்.இதன்போது நான்கு பேர் ஏரியில் மூழ்கிய நிலையில், இருவர் உயிரிழந்ததுடன் ஏனையவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.இறுதி ஊர்வலத்தின் போது மது அருந்திவிட்டு ஏரியில் குளிக்கச் சென்றது விசாரணையில் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement