• Sep 20 2024

திடீரென மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு..! யாழ்ப்பாணத்தில் பெரும் துயரம்..!

Chithra / Dec 14th 2023, 3:51 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். 

சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு, கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 

அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த 69 வயதுடைய இரட்ணம் அருளானந்தம்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

அதேவேளை, பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

81 வயதுடைய புன்னாலை கட்டுவான் வடக்கை சேர்ந்த செல்வம் சிவானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.

திடீரென மயங்கி விழுந்த இரு முதியவர்கள் உயிரிழப்பு. யாழ்ப்பாணத்தில் பெரும் துயரம்.  யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை இருவேறு இடங்களில் திடீரென மயங்கி விழுத்த முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சங்கானை பகுதியில் உள்ள அரைக்கும் ஆலையில், அரைக்க கொடுத்து விட்டு, கதிரையில் காத்திருந்தவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு சங்கானை பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பொன்னாலை மேற்கு சுழிபுரத்தை சேர்ந்த 69 வயதுடைய இரட்ணம் அருளானந்தம்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அதேவேளை, பலாலி பகுதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தவேளை மயங்கி விழுந்த முதியவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு, தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 81 வயதுடைய புன்னாலை கட்டுவான் வடக்கை சேர்ந்த செல்வம் சிவானந்தம் என்பவரே உயிரிழந்துள்ளார் என தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement