• Oct 04 2024

மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்திய மேலும் இருவர் கைது!

Chithra / Oct 3rd 2024, 12:30 pm
image

Advertisement


மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (02) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் களனி மற்றும் தெஹிவளை பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 03 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

அம்பகோட்டே மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 41 வயதுடைய இருவரே கைதுசெய்யப்படடுள்ளனர்.

இவர்கள் இன்று (03) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள் அதிகமான சுவரொட்டிகளை அச்சிட்டு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.


மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்திய மேலும் இருவர் கைது மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தி சுவரொட்டிகளை ஒட்டிய சம்பவம் தொடர்பில் மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று (02) பிற்பகல் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் களனி மற்றும் தெஹிவளை பகுதிகளில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 03 கையடக்கத் தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.அம்பகோட்டே மற்றும் தெஹிவளை பிரதேசங்களைச் சேர்ந்த 27 மற்றும் 41 வயதுடைய இருவரே கைதுசெய்யப்படடுள்ளனர்.இவர்கள் இன்று (03) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.சந்தேகநபர்கள் அதிகமான சுவரொட்டிகளை அச்சிட்டு வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களை கைதுசெய்வதற்கான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement