• Oct 19 2024

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது...!

Sharmi / May 3rd 2024, 1:04 pm
image

Advertisement

யாழில் அனுமதிப் பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் சுண்டிக்குளம்-சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடித்த படகு ஒன்றை நேற்றையதினம்(02) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடற்படை முகாமிற்கு அருகில் நீண்ட நேரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் தரித்து நின்ற படகை சுண்டிக்குளம் கடற்படையினர் திடீர் சோதனை செய்தனர். 

இந்த சோதனையில் குறித்த படகு அனுமதி பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டமை தெரிய வந்தது.

இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் சுண்டிக்குளம் கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது. யாழில் அனுமதிப் பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,யாழ்ப்பாணம் சுண்டிக்குளம்-சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடித்த படகு ஒன்றை நேற்றையதினம்(02) கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.கடற்படை முகாமிற்கு அருகில் நீண்ட நேரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் தரித்து நின்ற படகை சுண்டிக்குளம் கடற்படையினர் திடீர் சோதனை செய்தனர். இந்த சோதனையில் குறித்த படகு அனுமதி பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டமை தெரிய வந்தது.இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் சுண்டிக்குளம் கடற்படை முகாமுக்கு அழைத்துவரப்பட்டு விசாரணையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement