• May 09 2024

துபாயில் ஒரே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்கள்..! - அதிர்ச்சியில் உறவினர்கள்

Chithra / Apr 4th 2024, 3:50 pm
image

Advertisement

 

ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் துபாயில் பணியாற்றிய  நிலையில்  ஒரே  நாளில் இருவரும்  உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள்  ஆராச்சிக்கட்டு நல்லதரன்கட்டு கிரிவெல்கெலேயைச் சேர்ந்த  28 வயதான சந்துன் மதுசங்க என்ற  இளைஞரும்,

ஆராச்சிக்கட்டு அண்டன்வில்வத்தையைச் சேர்ந்த ரமேஷ் உதார திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.

இவர்கள்  குருநாகலில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் இருந்து துபாய்க்கு வேலைக்குச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்

தினமும் இவர்கள்  தமது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளதுடன், தாம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்   தாம் சுகவீனமுற்றுள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.

உடல்நிலை மோசமடைந்ததையடுத்து உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள்  கடந்த 30ஆம் திகதி உயிரிழந்ததாக பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இலங்கை அரசாங்கம்  தலையிட்டு இறந்தவர்களின் உடல்களை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து, முறையான நியாயமான விசாரணை நடத்தி, மரணத்துக்கான காரணங்களை கண்டறிய வேண்டும்  என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

உடல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஒரு சடலத்துக்கு  12 இலட்சம் ரூபாவுக்கு  மேல் செலவாகும் எனவும், இவ்வளவு பெரிய தொகையை  தம்மால் வழங்க முடியாது எனவும்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.


துபாயில் ஒரே நாளில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கையர்கள். - அதிர்ச்சியில் உறவினர்கள்  ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களைச் சேர்ந்த இருவர் துபாயில் பணியாற்றிய  நிலையில்  ஒரே  நாளில் இருவரும்  உயிரிழந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இவ்வாறு உயிரிழந்தவர்கள்  ஆராச்சிக்கட்டு நல்லதரன்கட்டு கிரிவெல்கெலேயைச் சேர்ந்த  28 வயதான சந்துன் மதுசங்க என்ற  இளைஞரும்,ஆராச்சிக்கட்டு அண்டன்வில்வத்தையைச் சேர்ந்த ரமேஷ் உதார திலின என்ற 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையும் ஆவார்.இவர்கள்  குருநாகலில் உள்ள பிரபல நிறுவனமொன்றில் இருந்து துபாய்க்கு வேலைக்குச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்தினமும் இவர்கள்  தமது உறவினர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளதுடன், தாம் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர்   தாம் சுகவீனமுற்றுள்ளதாக உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.உடல்நிலை மோசமடைந்ததையடுத்து உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள்  கடந்த 30ஆம் திகதி உயிரிழந்ததாக பிரதேச வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, இலங்கை அரசாங்கம்  தலையிட்டு இறந்தவர்களின் உடல்களை இந்த நாட்டுக்குக் கொண்டு வந்து, முறையான நியாயமான விசாரணை நடத்தி, மரணத்துக்கான காரணங்களை கண்டறிய வேண்டும்  என உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   உடல்களை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு ஒரு சடலத்துக்கு  12 இலட்சம் ரூபாவுக்கு  மேல் செலவாகும் எனவும், இவ்வளவு பெரிய தொகையை  தம்மால் வழங்க முடியாது எனவும்  உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement