ஐக்கிய நாட்டு நிறுவனம் மனித இயந்திரங்களின் துணையுடன் உலகளாவிய இலக்குகளை எட்ட புதிய திட்டங்களை முன்னெடுக்கின்றது.
நாய்களின் வடிவத்திலும் மனித உருவத்திலுமான இயந்திரங்களை இந்த நிறுவனம் திரட்டியுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டில் 17 நீடித்த மேம்பாட்டு இலக்குகளை 2030க்குள் எட்ட இந்த நிறுவனம் முயற்சிகளை முன்னெடுக்கின்றது.
மனித வாழ்க்கையையும் பூமியையும் மேம்படுத்துவது இதன் நோக்கம்.
சுவிட்சர்லந்தில் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் தொழில்நுட்ப அமைப்பு ஏற்பாடு செய்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் மனித இயந்திரங்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.