வவுனியா மாநகரசபையினால் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் காணப்பட்ட அங்காடி வியாபார கொட்டகை இன்றையதினம்(23) அகற்றப்பட்டது.
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே செருப்பு தைக்கும் அங்காடி வியாபார கொட்டகையில், இரவு வேளைகளில் தவறான நடவடிக்கை இடம்பெறுவதாகவும், அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதார சீர்கேட்டிற்குட்படுவதாக அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களின் முறைப்பாடுகளிற்கு அமைவாகவே குறித்த கொட்டகை அகற்றப்பட்டதுடன் பிறிதொரு இடம் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தது.
மேலும் இத்தொழிலில் ஈடுபட்ட விசேட தேவைக்குட்பட்ட பெண்ணிற்கு, விசேட தேவைக்குட் பட்டவர்களை பராமரிக்கும் காப்பகத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மாநகரசபை வருமான பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா மாநகரசபையால் அங்காடி வியாபார கொட்டகை அகற்றம். வவுனியா மாநகரசபையினால் பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் காணப்பட்ட அங்காடி வியாபார கொட்டகை இன்றையதினம்(23) அகற்றப்பட்டது.வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள தனிநாயகம் அடிகளாரின் சிலை அருகே செருப்பு தைக்கும் அங்காடி வியாபார கொட்டகையில், இரவு வேளைகளில் தவறான நடவடிக்கை இடம்பெறுவதாகவும், அதனை சுற்றியுள்ள பகுதிகளை சுகாதார சீர்கேட்டிற்குட்படுவதாக அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களின் முறைப்பாடுகளிற்கு அமைவாகவே குறித்த கொட்டகை அகற்றப்பட்டதுடன் பிறிதொரு இடம் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்தது.மேலும் இத்தொழிலில் ஈடுபட்ட விசேட தேவைக்குட்பட்ட பெண்ணிற்கு, விசேட தேவைக்குட் பட்டவர்களை பராமரிக்கும் காப்பகத்தில் இணைப்பதற்கான நடவடிக்கையினை மாநகரசபை வருமான பரிசோதகரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.