• Sep 17 2024

வட்டுக்கோட்டையில் வன்முறை கும்பலின் அடாவடித்தனம்; ஒருவர் கைது! பலருக்கு வலைவீச்சு

Chithra / Sep 5th 2024, 4:02 pm
image

Advertisement


வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார.

இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு  முன்பாக கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில், விரைந்து செயற்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற வீட்டினை பார்வையிட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

அதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய ஐவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.


வட்டுக்கோட்டையில் வன்முறை கும்பலின் அடாவடித்தனம்; ஒருவர் கைது பலருக்கு வலைவீச்சு வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கணவத்தை பகுதியில் நேற்றையதினம் இரவு இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார.இதன்போது சிறுவர்கள், பெண் உட்பட ஐவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் சம்பவம் குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், ஊரவர்கள் இணைந்து, வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யுமாறு கூறி பொலிஸ் நிலையத்திற்கு  முன்பாக கவனயீர்ப்பிலும் ஈடுபட்டனர்.இந்நிலையில், விரைந்து செயற்பட்ட வட்டுக்கோட்டை பொலிஸார், சம்பவம் இடம்பெற்ற வீட்டினை பார்வையிட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அதேவேளை, குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய ஐவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement