• May 18 2024

ஜனாதிபதி ரணிலை வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கும் அனுர..! தேல்தல் வெற்றி குறித்து சூளுரை

Chithra / Jan 7th 2024, 1:23 pm
image

Advertisement

 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். 

அடுத்து நடக்கப் போவது ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஆகிய இரண்டில் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றியீட்டுவோம்.

ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டி நடத்தப்பட்டால் ரணில் நிச்சயமாக தோல்வி அடைவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அதில் வெற்றியீட்டி, ஜனாதிபதி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு காரணமாக எந்த தேர்தலை முன்கூட்டி நடத்துவது என்பதில் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்திக்கு சாதகமற்ற தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கே அரசாங்கம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.



ஜனாதிபதி ரணிலை வீட்டுக்கு அனுப்ப காத்திருக்கும் அனுர. தேல்தல் வெற்றி குறித்து சூளுரை  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வீட்டுக்கு அனுப்புவோம் என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.கம்பஹா பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அடுத்து நடக்கப் போவது ஜனாதிபதி அல்லது பொதுத் தேர்தல் ஆகிய இரண்டில் எதுவாக இருந்தாலும் அதில் வெற்றியீட்டுவோம்.ஜனாதிபதி தேர்தல் முன்கூட்டி நடத்தப்பட்டால் ரணில் நிச்சயமாக தோல்வி அடைவார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் தேசிய மக்கள் சக்தி அதில் வெற்றியீட்டி, ஜனாதிபதி தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் மத்தியில் காணப்படும் ஆதரவு காரணமாக எந்த தேர்தலை முன்கூட்டி நடத்துவது என்பதில் அரசாங்கத்திற்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.தேசிய மக்கள் சக்திக்கு சாதகமற்ற தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கே அரசாங்கம் விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement