• Apr 20 2025

பிரித்தானியா தடைசெய்யவுள்ள போர்க்குற்றவாளிகள் யார்? நாளை வெளியாகவுள்ள தடைப்பட்டியல்!

Tamil nila / Dec 9th 2024, 7:43 pm
image

பிரித்தானிய தொழிலாளர் கட்சி, தமிழர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்பதாக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. 

அவற்றில் குறிப்பாக, ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இலங்கை போர்க்குற்றவாளிகளை தடை செய்வதாக உத்தரவாதம் வழங்கியிருந்தது. ஆயினும் 100 நாட்கள் கடந்தும் இந்த வாக்குறுதி் நிறைவேற்றப்பவில்லை. 

2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகார சபையின்  கீழ், இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் உட்பட பலர் கோரியிருந்தனர். 


மேலும் ஏப்பிரல் 2021 இல் ITJP என்ற மனித உரிமைகள் அமைப்பு சவேந்திர சில்வாவுக்கு எதிராக 50 பக்க ஆவணத்தை பிரித்தானிய வெளி விவகார அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தது. 

 அதே போல ICPPGயும் தொடரும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்து, இலங்கை அதிகாரிகளை தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்ததுடன் போராட்டங்களையும் முன்னெடுத்தது. 


அதனை தொடர்ந்து, ICPPG அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சித்திரவரையால் பாதிக்கப்பட்டவரகள் மற்றும் இரண்டாம் தலைமுறை இளையோரை ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை பல வழிகளில் முன்னெடுத்து வருகிறது. 

அந்த வகையில் பிரித்தானியா வாழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்தனர். 

அவர்களின் முயற்சியில் 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன்  மூலம் முன் பிரேரணை  ஒன்று கொண்டுவரப்பட்டது. 

அதனை தொடர்ந்து அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி இப்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டது. 

கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு 23 யூலை 2021 அன்று பிரித்தானிய பிரதமருக்கு ICPPG யால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளி விவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக அமையவில்லை. 

இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதுடன், இதுவரை 100க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். 

பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வீடியோவில் தெரிவித்து ஒரு வீடியோ ஆவணத்தையும் வெளியிட்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்றில் விவாதங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர். 

தற்போது பிரித்தானியாவில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தபின்னரும் ICPPG இந்த போராட்டத்தை தொடர்ந்து வருவதுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. 

அத்துடன் Tamils For Labour மற்றும் British Tamil Conservatives ஆகிய அமைப்புக்களின் நெருக்குதலில் , சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய நாளை  10 டிசம்பர் 2024 அன்று பிரித்தானியா இலங்கை யுத்தகுற்றவாளிகள் உட்பட்ட பலரை தடைசெய்து, அதற்கான பட்டியலை அறிவிக்க உள்ளதாக தெரியவருகின்றது.

பிரித்தானியா தடைசெய்யவுள்ள போர்க்குற்றவாளிகள் யார் நாளை வெளியாகவுள்ள தடைப்பட்டியல் பிரித்தானிய தொழிலாளர் கட்சி, தமிழர்களின் கோரிக்கைகள் சிலவற்றை ஏற்பதாக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. அவற்றில் குறிப்பாக, ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் இலங்கை போர்க்குற்றவாளிகளை தடை செய்வதாக உத்தரவாதம் வழங்கியிருந்தது. ஆயினும் 100 நாட்கள் கடந்தும் இந்த வாக்குறுதி் நிறைவேற்றப்பவில்லை. 2020 இல் நடைமுறைக்கு வந்த உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடை விதிப்பு அதிகார சபையின்  கீழ், இலங்கையில் இனப்படுகொலையில் ஈடுபட்ட இராணுவத்தளபதி சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்த குற்றவாளிகளை பிரித்தானிய அரசு, தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பிரித்தானியாவிலுள்ள இனப்படுகொலையை தடுப்பதற்கும் தண்டிப்பதற்குமான சர்வதேச மையம் உட்பட பலர் கோரியிருந்தனர். மேலும் ஏப்பிரல் 2021 இல் ITJP என்ற மனித உரிமைகள் அமைப்பு சவேந்திர சில்வாவுக்கு எதிராக 50 பக்க ஆவணத்தை பிரித்தானிய வெளி விவகார அமைச்சுக்கு சமர்ப்பித்திருந்தது.  அதே போல ICPPGயும் தொடரும் சித்திரவதை பற்றிய ஆதாரங்கள் அடங்கிய அறிக்கைகளை சமர்ப்பித்து, இலங்கை அதிகாரிகளை தடைசெய்யும் படி கோரிக்கை விடுத்ததுடன் போராட்டங்களையும் முன்னெடுத்தது. அதனை தொடர்ந்து, ICPPG அனைத்து தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள், அனைத்து மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், சித்திரவரையால் பாதிக்கப்பட்டவரகள் மற்றும் இரண்டாம் தலைமுறை இளையோரை ஒன்றிணைந்து இந்த போராட்டத்தை பல வழிகளில் முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் பிரித்தானியா வாழ் இளையோர் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளதுடன், இணைய வழி கையெழுத்து போராட்டம் ஒன்றையும் ஆரம்பித்தனர். அவர்களின் முயற்சியில் 18 மே 2021 அன்று பிரித்தானிய பாராளுமன்றில் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மக்லோக்லின் ஆன்  மூலம் முன் பிரேரணை  ஒன்று கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து அனைத்து பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டு, தொடர் சந்திப்புக்களை நடாத்தி இப்பிரேரணைக்கு 33 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கையெழுத்தும் பெறப்பட்டது. கறுப்பு யூலை தினத்தை முன்னிட்டு 23 யூலை 2021 அன்று பிரித்தானிய பிரதமருக்கு ICPPG யால் சமர்ப்பிக்கப்பட்ட மனுவிற்கு பிரித்தானிய அரசின் வெளி விவகார அமைச்சின் பதில் திருப்திகரமாக அமையவில்லை. இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஆயிரக்கணக்கான கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதுடன், இதுவரை 100க்கு மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து, சவேந்திர சில்வா உள்ளிட்ட போர்க்குற்றவாளிகளை பிரித்தானியா தடை செய்ய FCDO இற்கு அழுத்தம் கொடுக்குமாறும் கோரிக்கை விடுத்தனர். பல பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை வீடியோவில் தெரிவித்து ஒரு வீடியோ ஆவணத்தையும் வெளியிட்டிருந்தனர். பிரித்தானிய பாராளுமன்றில் விவாதங்களையும் ஏற்பாடு செய்திருந்தனர். தற்போது பிரித்தானியாவில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்தபின்னரும் ICPPG இந்த போராட்டத்தை தொடர்ந்து வருவதுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும்படியும் பிரித்தானிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் Tamils For Labour மற்றும் British Tamil Conservatives ஆகிய அமைப்புக்களின் நெருக்குதலில் , சர்வதேச மனித உரிமைகள் தினமாகிய நாளை  10 டிசம்பர் 2024 அன்று பிரித்தானியா இலங்கை யுத்தகுற்றவாளிகள் உட்பட்ட பலரை தடைசெய்து, அதற்கான பட்டியலை அறிவிக்க உள்ளதாக தெரியவருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement