கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள தருமபுரம் பொதுச் சந்தை அண்மைக்காலமாக உரிய முறையில் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்
மேலும் இச்சந்தையானது வாரத்தில் இரு நாட்கள் அல்லது வாரத்தில் ஒரு நாளே கழிவற்றல் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக சந்தை பகுதி தொடர்ச்சியாக கால்நடைகளின் உறைவிடமாக காணப்படுவதுடன் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக துர்நாற்றம் வீசுகின்றது. அத்துடன் ஆங்காங்கே கால்நடைகளின் எச்சங்களும் மழையில் கரைந்தோடி அசுத்தமாக்குகின்ற நிலையில் காணப்படுகின்றது.
இச்சம்பவத்தால் நாளாந்தம் கொள்வளவு செய்ய வருவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்
தருமபுர சந்தையின் சீர்கேடு சீர்செய்யப்படுமா - ஏங்கும் மக்கள் கரைச்சிப் பிரதேச சபையின் கீழ் உள்ள தருமபுரம் பொதுச் சந்தை அண்மைக்காலமாக உரிய முறையில் கழிவகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாத நிலையில் காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்மேலும் இச்சந்தையானது வாரத்தில் இரு நாட்கள் அல்லது வாரத்தில் ஒரு நாளே கழிவற்றல் நடைபெறுவதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சந்தை பகுதி தொடர்ச்சியாக கால்நடைகளின் உறைவிடமாக காணப்படுவதுடன் தற்பொழுது பெய்து வரும் மழை காரணமாக துர்நாற்றம் வீசுகின்றது. அத்துடன் ஆங்காங்கே கால்நடைகளின் எச்சங்களும் மழையில் கரைந்தோடி அசுத்தமாக்குகின்ற நிலையில் காணப்படுகின்றது. இச்சம்பவத்தால் நாளாந்தம் கொள்வளவு செய்ய வருவோர் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்திருந்த போதிலும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் காணப்படுவதாக சந்தை வியாபாரிகள் மற்றும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்