• May 17 2024

96ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பெண் ஏழு நாட்களின் பின் உயிரிழந்த சோகம்..! - இலங்கையில் துயரச் சம்பவம்

Chithra / Dec 20th 2023, 3:30 pm
image

Advertisement

 

முச்சக்கர வண்டியில் மோதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் தனது 96 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ஏழு நாட்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த  8 பிள்ளைகளின் தாயாவார்.

இவர் உறவினரது வீடொன்றிற்கு சென்று கொண்டிருக்கும் போது முச்சக்கர வண்டி மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் தலவத்துகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இவர் சிறிது குணமடைந்ததும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் தனது 96 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.

இதனையடுத்து இவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

96ஆவது பிறந்த நாளை கொண்டாடிய பெண் ஏழு நாட்களின் பின் உயிரிழந்த சோகம். - இலங்கையில் துயரச் சம்பவம்  முச்சக்கர வண்டியில் மோதி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற பெண் ஒருவர் தனது 96 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ஏழு நாட்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.உயிரிழந்தவர் தலவத்துகொட பிரதேசத்தை சேர்ந்த  8 பிள்ளைகளின் தாயாவார்.இவர் உறவினரது வீடொன்றிற்கு சென்று கொண்டிருக்கும் போது முச்சக்கர வண்டி மோதியதில் பலத்த காயமடைந்துள்ளார்.காயமடைந்தவர் தலவத்துகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.இவர் சிறிது குணமடைந்ததும் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் தனது 96 ஆவது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார்.இதனையடுத்து இவர் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement