கைதடி முதியோர் இல்லத்தில் 1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி முதியோரை மகிழ்வித்த நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் இந்த சாகச நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.
முதியோர் இல்ல வளாகத்தில் இன்று காலை திங்கட்கிழமை (06) 1500 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50 மீற்றர் தூரம் தனது காதில் கட்டி இழுத்து முதியோர் இல்ல முதியவர்களை மகிழ்வித்திருந்தார்.
62வயதான மட்டுவிலைச் சேர்ந்த செ.திருச்செல்வம் 5 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் தனது தாடி,தலை முடி,காது,உடல் ஆகியவற்றில் கனரக வாகனங்களைக் கட்டி இழுத்து சோழன் மற்றும் கலாம் உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1500 கிலோ கிராம் வாகனத்தை காதில் கட்டி இழுத்து மகிழ்விப்பு; கைதடி முதியோர் இல்லத்தில் உலக சாதனையாளர் சாகசம் கைதடி முதியோர் இல்லத்தில் 1500 கிலோகிராம் வாகனத்தை காதில் கட்டி முதியோரை மகிழ்வித்த நெகிழ்ச்சிச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சர்வதேச முதியோர் தினத்தையொட்டி உலக சாதனையாளர் செ.திருச்செல்வத்தால் இந்த சாகச நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது.முதியோர் இல்ல வளாகத்தில் இன்று காலை திங்கட்கிழமை (06) 1500 கிலோகிராம் எடை கொண்ட வாகனத்தை 50 மீற்றர் தூரம் தனது காதில் கட்டி இழுத்து முதியோர் இல்ல முதியவர்களை மகிழ்வித்திருந்தார்.62வயதான மட்டுவிலைச் சேர்ந்த செ.திருச்செல்வம் 5 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரன் என்பது குறிப்பிடத்தக்கது.அவர் தனது தாடி,தலை முடி,காது,உடல் ஆகியவற்றில் கனரக வாகனங்களைக் கட்டி இழுத்து சோழன் மற்றும் கலாம் உலக சாதனைப் புத்தகங்களில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.