• Sep 21 2024

பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தால் 3 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது.! தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை.!

Tamil nila / Feb 3rd 2023, 10:51 am
image

Advertisement

தேர்தலுக்கான செலவீன ஒழுங்குப்படுத்தல் தொடர்பாக சட்ட வரைபு கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை இரண்டு முறை அனுமதி வழங்கிய போதும் அது நிறைவேற்றப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆனால் அரசியல் நிலைமை குறித்து நாட்டு மக்கள் முழுமையாக கவனம் செலுத்தியுள்ள பின்னணியில் குறுகிய காலத்திற்குள் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடந்த மாதம் 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


குறிப்பாக தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் உருவாக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் தேர்தல் செலவுகள் தொடர்பான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும் என்ற திருத்தம் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். 


உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 300 ரூபா செலவு செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என்றும் 

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஒரு வேட்பாளர் வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபா செலவு செய்ய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்,


இந்த தீர்மானத்தை ஆணைக்குழு பரிசீலனை செய்து அந்த தொகையை 20 ரூபாவாக நிர்ணயித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதற்கமைய ஒரு சுயேட்சை வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 20 ரூபா செலவு செய்ய வேண்டும், 

அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒரு தேர்தல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 20 ரூபாவினால் பெருக்கி, வரும் தொகையில் 60 சதவீதத்தை அந்த தேர்தல் தொகுதிக்காக செலவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.


தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பெறுபேறு வெளியாகி 21 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தேர்தலுக்கு செலவான நிதி மற்றும் அந்த நிதியை திரட்டிக் கொண்ட விதம் தொடர்பான தெளிவான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். 


வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.குறித்த தகவல்களை இலங்கை பிரஜைகள் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.


வேட்பாளர் ஒருவருக்கு அவரது அனுசரனையாளர்கள் செலவு செய்யும் நிதி தொடர்பில் குறித்த வேட்பாளர் பொறுப்புக் கூற வேண்டும்.


பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தால் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஒருவரின் அரசியல் பதவி பறிக்கப்படும்.


அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் செலவு தொடர்பில் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால்  அவர் மூன்று வருடங்களுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.


பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தால் 3 வருடங்களுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது. தேர்தல்கள் ஆணையாளர் எச்சரிக்கை. தேர்தலுக்கான செலவீன ஒழுங்குப்படுத்தல் தொடர்பாக சட்ட வரைபு கடந்த 2019 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு அதற்கு அமைச்சரவை இரண்டு முறை அனுமதி வழங்கிய போதும் அது நிறைவேற்றப்படவில்லை என தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.ஆனால் அரசியல் நிலைமை குறித்து நாட்டு மக்கள் முழுமையாக கவனம் செலுத்தியுள்ள பின்னணியில் குறுகிய காலத்திற்குள் தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் கடந்த மாதம் 19 ஆம் திகதி நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பாக தேர்தல் செலவீனம் ஒழுங்குப்படுத்தல் சட்டம் உருவாக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் தேர்தல் செலவுகள் தொடர்பான தீர்மானத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானிக்க வேண்டும் என்ற திருத்தம் சட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 300 ரூபா செலவு செய்ய வேண்டும் என ஆரம்பத்தில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை என்றும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து ஒரு வேட்பாளர் வாக்காளர் ஒருவருக்கு 15 ரூபா செலவு செய்ய அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் இணக்கம் தெரிவித்தனர்,இந்த தீர்மானத்தை ஆணைக்குழு பரிசீலனை செய்து அந்த தொகையை 20 ரூபாவாக நிர்ணயித்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.இதற்கமைய ஒரு சுயேட்சை வேட்பாளர் ஒரு வாக்காளருக்கு 20 ரூபா செலவு செய்ய வேண்டும், அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஒரு தேர்தல் தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையை 20 ரூபாவினால் பெருக்கி, வரும் தொகையில் 60 சதவீதத்தை அந்த தேர்தல் தொகுதிக்காக செலவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டது.தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தேர்தல் பெறுபேறு வெளியாகி 21 நாட்களுக்குள் மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களிடம் தேர்தலுக்கு செலவான நிதி மற்றும் அந்த நிதியை திரட்டிக் கொண்ட விதம் தொடர்பான தெளிவான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்படும்.குறித்த தகவல்களை இலங்கை பிரஜைகள் அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.வேட்பாளர் ஒருவருக்கு அவரது அனுசரனையாளர்கள் செலவு செய்யும் நிதி தொடர்பில் குறித்த வேட்பாளர் பொறுப்புக் கூற வேண்டும்.பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்தால் தேர்தலில் வெற்றிப் பெற்ற ஒருவரின் அரசியல் பதவி பறிக்கப்படும்.அத்துடன் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒருவர் செலவு தொடர்பில் பொய்யான ஆவணங்களை சமர்ப்பித்திருந்தால்  அவர் மூன்று வருடங்களுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement