• May 05 2024

உயிர் நண்பனை கல்லால் அடித்தே கொன்ற இளைஞர்கள்!!! Samugammedia

Tamil nila / Dec 31st 2023, 9:14 pm
image

Advertisement

இளைஞர் ஒருவரை காதல் விவகாரத்தில் நண்பர்களே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக மாவட்டம் சேலத்தில்  சங்ககிரி அருகே உள்ள சடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்.

கூலித் தொழிலாளியான இவர் கடந்த வியாழக்கிழமை இரவில் இருந்து காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் பதறியுள்ளனர்.

இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் தனது நண்பரான வேணுகோபாலை கொலை செய்து விட்டு கால்வாயில் வீசியதாக கூறி பொலிஸில் சரணடைந்துள்ளார்.

உடனடியாக வேணுகோபாலின் உடலை கால்வாயில் இருந்து மீட்ட பொலிஸார், ஆபிரகாமிடம் விசாரணையை தொடங்கினர்.

அத்துடன் வேணுகோபாலுடன் தகராறு ஏற்பட்டதால், மதுபோதையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கல்லால் தாக்கி அவரை கொலை செய்துள்ளார் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். 

அத்துடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.


உயிர் நண்பனை கல்லால் அடித்தே கொன்ற இளைஞர்கள் Samugammedia இளைஞர் ஒருவரை காதல் விவகாரத்தில் நண்பர்களே கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.தமிழக மாவட்டம் சேலத்தில்  சங்ககிரி அருகே உள்ள சடையம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேணுகோபால்.கூலித் தொழிலாளியான இவர் கடந்த வியாழக்கிழமை இரவில் இருந்து காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் பதறியுள்ளனர்.இதனையடுத்து, அதே பகுதியைச் சேர்ந்த ஆபிரகாம் என்பவர் தனது நண்பரான வேணுகோபாலை கொலை செய்து விட்டு கால்வாயில் வீசியதாக கூறி பொலிஸில் சரணடைந்துள்ளார்.உடனடியாக வேணுகோபாலின் உடலை கால்வாயில் இருந்து மீட்ட பொலிஸார், ஆபிரகாமிடம் விசாரணையை தொடங்கினர்.அத்துடன் வேணுகோபாலுடன் தகராறு ஏற்பட்டதால், மதுபோதையில் தன் நண்பர்களுடன் சேர்ந்து கல்லால் தாக்கி அவரை கொலை செய்துள்ளார் என ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அத்துடன் இச்சம்பவத்தில் தொடர்புடைய மேலும் இருவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement