• Apr 13 2025

நாட்டை வந்தடைந்த 1,485 மெற்றிக் தொன் உப்பு..!

Sharmi / Jan 28th 2025, 10:07 am
image

இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் உப்பின் முதல் தொகுதி நேற்று இலங்கைக்கு வந்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

அண்மைய பருவமழை காலத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாக உள்ளூர் சந்தையில் உப்புத் தட்டுப்பாட்டைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன்படி, எதிர்வரும் மாசி மாதம் 28 வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த வாரம் உப்பு இறக்குமதி பற்றிய புதுப்பிப்பை வழங்கிய அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ, ஜனவரி 31இற்குள் கூடுதலாக

12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதிக்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


நாட்டை வந்தடைந்த 1,485 மெற்றிக் தொன் உப்பு. இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெற்றிக் தொன் உப்பின் முதல் தொகுதி நேற்று இலங்கைக்கு வந்துள்ளதாக அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.30,000 மெற்றிக் தொன் உப்பை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.அண்மைய பருவமழை காலத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் காரணமாக உள்ளூர் சந்தையில் உப்புத் தட்டுப்பாட்டைத் தீர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதன்படி, எதிர்வரும் மாசி மாதம் 28 வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.இதற்கிடையில், கடந்த வாரம் உப்பு இறக்குமதி பற்றிய புதுப்பிப்பை வழங்கிய அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத் தலைவர் ரவீந்திர பெர்னாண்டோ, ஜனவரி 31இற்குள் கூடுதலாக12,500 மெற்றிக் தொன் உப்பு இறக்குமதிக்கு எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement