• May 17 2024

யாழில் வறுமையில் சிக்கித் தவிக்கும் 1,814 கர்ப்பிணிகள்! வெளியான அதிர்ச்சித் தகவல் SamugamMedia

Chithra / Mar 17th 2023, 11:34 am
image

Advertisement

யாழ் மாவட்டததில் 1814 கற்பிணிகள் வறுமை நிலையில் சிக்கித் தவிர்க்கும் நிலையில் உள்ளதாக யாழ் மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர்காலத்திற்குப்  பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 


இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிகள் உள்ளனர். பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்ப்பிணிப் பெண்களும், சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 118 கர்ப்பிணிகளும் உள்ளனர்.

அதேபோன்று உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்ப்பிணிகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்ப்பிணிகளும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.


மேலும் வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்ப்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்ப்பிணிகளும், நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகளும் ஆக 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

அதே நேரம் அரசாங்கத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது 8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

யாழில் வறுமையில் சிக்கித் தவிக்கும் 1,814 கர்ப்பிணிகள் வெளியான அதிர்ச்சித் தகவல் SamugamMedia யாழ் மாவட்டததில் 1814 கற்பிணிகள் வறுமை நிலையில் சிக்கித் தவிர்க்கும் நிலையில் உள்ளதாக யாழ் மாவட்ட செயலகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் ஏற்பட்ட கொரோனா இடர்காலத்திற்குப்  பின்னர் ஏற்பட்ட பொருளாதார நிலை காரணமாக பல கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 370 கர்ப்பிணிகள் உள்ளனர். பருத்தித்துறைப் பிரதேச செயலகத்தில் 226 கர்ப்பிணிப் பெண்களும், சங்கானைப் பிரதேச செயலகத்தில் 157 கர்ப்பிணிகளும், தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் 139 கர்ப்பிணிகளும், யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் 138 கர்ப்பிணிகளும், கரவெட்டி பிரதேச செயலகப் பிரிவில் 128 கர்ப்பிணிப் பெண்களும், சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் 118 கர்ப்பிணிகளும் உள்ளனர்.அதேபோன்று உடுவில் பிரதேச செயலகப் பிரிவில் 117 கர்ப்பிணிகளும், மருதங்கேணி பிரதேச செயலகப் பிரிவில் 98 கர்ப்பிணிகளும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகப் பிரிவில் 97 கர்ப்பிணிகளும், நல்லூர் பிரதேச செயலகப் பிரிவில் 91 கர்ப்பிணிகளும், காரைநகர் பிரதேச செயலகப் பிரிவில் 40 கர்ப்பிணிகளும் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.மேலும் வேலணைப் பிரதேச செயலகப் பிரிவில் 49 கர்ப்பிணிகளும், ஊர்காவற்துறை பிரதேச செயலகப் பிரிவில் 25 கர்ப்பிணிகளும், நெடுந்தீவுப் பிரதேச செயலகப் பிரிவில் 21 கர்ப்பிணிகளும் ஆக 1814 பேர் வறுமை நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதே நேரம் அரசாங்கத்தினால் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் 2 ஆயிரம் ரூபா கொடுப்பனவானது 8 மாதங்களுக்கு மேலாக வழங்கப்படாமல் உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

Advertisement

Advertisement

Advertisement