• May 17 2024

பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆண்டு பூர்த்தி நிகழ்வு..!samugammedia

Sharmi / Jun 27th 2023, 1:04 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை  மெதடித்த பெண்கள் உயர்தர தேசிய  பாடசாலையின் 200 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கோலாகலமான நிகழ்வுகள் இன்று(27) ஆரம்பமாகின.

முதல்  நிகழ்வாக பிரதம, சிறப்பு விருந்தினர்கள் பாடசாலை நுழைவாயிலிலிருந்து பாடசாலை மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசை முழங்க வரவேற்க்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின..

முதல் நிகழ்வாக தேசிய கொடி, பாடசாலை கொடி என்பன முறையே யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராசா, பாடசாலை அதிபர் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.

தொடர்ந்து சைவ, கிறிஸ்தவ இறை வணக்கங்கள் இடம் பெற்றது.தொடர்ந்து வரவேற்பு மற்றும் தலைமை உரையினை கல்லூரி முதல்வர் நிகழ்த்தினார்.

அதனை தொடர்ந்து சிறப்புரையினை  நிகழ்வின் பிரதம விருந்தினரும், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான  பேராசிரியர் சிறிசற்குணராசா நிகழ்தியதை தொடர்ந்து நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக துணை வேந்தர் நாடா வெட்டி ஆரம்பித்துவைத்தார்.

இதனை தொடர்ந்து மாணவிகள், பழைய மாணவிகள் அதிபர் ஆசிரியர்களின் துவிச்சக்கர வண்டி பவனி, வாகன பவனி, நடை பவனி என்பன இடம் பெற்றன.

இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சற்குணராஜா, ஹாட்லிக் கல்லூரி அதிபர் கலைச்செல்வன்,  வடமராட்சி வலய கல்வி பணிமனை அதிகாரிகள், அயல் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள்,  புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்  நலன் விரும்பிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நடைபவனி கல்லூரி வீதி ஊடாக சென்று பருத்தித்துறை நகர், மந்திகை நகர், நெல்லியடி நகர், ஊடாக மீண்டும் பாடசாலை வளாகத்தில் சென்று முடிவடைந்துள்ளதுடன் நாளை, நாளை மறுதினமும் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.




பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தர தேசிய பாடசாலையின் 200 ஆண்டு பூர்த்தி நிகழ்வு.samugammedia யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை  மெதடித்த பெண்கள் உயர்தர தேசிய  பாடசாலையின் 200 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு கோலாகலமான நிகழ்வுகள் இன்று(27) ஆரம்பமாகின.முதல்  நிகழ்வாக பிரதம, சிறப்பு விருந்தினர்கள் பாடசாலை நுழைவாயிலிலிருந்து பாடசாலை மைதானம் வரை மலர் மாலை அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய இசை முழங்க வரவேற்க்கப்பட்டு அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.முதல் நிகழ்வாக தேசிய கொடி, பாடசாலை கொடி என்பன முறையே யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராசா, பாடசாலை அதிபர் ஆகியோர் ஏற்றிவைத்தனர்.தொடர்ந்து சைவ, கிறிஸ்தவ இறை வணக்கங்கள் இடம் பெற்றது.தொடர்ந்து வரவேற்பு மற்றும் தலைமை உரையினை கல்லூரி முதல்வர் நிகழ்த்தினார்.அதனை தொடர்ந்து சிறப்புரையினை  நிகழ்வின் பிரதம விருந்தினரும், யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தருமான  பேராசிரியர் சிறிசற்குணராசா நிகழ்தியதை தொடர்ந்து நிகழ்வுகளை சம்பிரதாய பூர்வமாக துணை வேந்தர் நாடா வெட்டி ஆரம்பித்துவைத்தார்.இதனை தொடர்ந்து மாணவிகள், பழைய மாணவிகள் அதிபர் ஆசிரியர்களின் துவிச்சக்கர வண்டி பவனி, வாகன பவனி, நடை பவனி என்பன இடம் பெற்றன.இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சற்குணராஜா, ஹாட்லிக் கல்லூரி அதிபர் கலைச்செல்வன்,  வடமராட்சி வலய கல்வி பணிமனை அதிகாரிகள், அயல் பாடசாலையின் அதிபர்கள், ஆசிரியர்கள்,  புலம்பெயர்ந்த மற்றும் உள்ளூர் பழைய மாணவர்கள், பெற்றோர்கள், மாணவர்கள்  நலன் விரும்பிகள் என ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.நடைபவனி கல்லூரி வீதி ஊடாக சென்று பருத்தித்துறை நகர், மந்திகை நகர், நெல்லியடி நகர், ஊடாக மீண்டும் பாடசாலை வளாகத்தில் சென்று முடிவடைந்துள்ளதுடன் நாளை, நாளை மறுதினமும் நிகழ்வுகள் இடம் பெறவுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement