நோட்டன் – தியகல வீதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரியவருகிறது… சிவனொளிபாதமலைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்று உள்ளதாகவும் ரத்மலானை பகுதியில் உள்ளவர்களே இவ்விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது
35 பேர் பஸ்ஸில் சென்றுள்ளதாக அறியக்கூடியதாக உள்ளது.
குறித்த பஸ் விபத்தில் 28 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், நோட்டன். பொலிஸார் தெரிவித்தனர்.