• Sep 20 2024

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 50 பேர் வெளியேற்றம்! samugammedia

Tamil nila / Jul 1st 2023, 7:46 am
image

Advertisement

சிங்கப்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென தீ மூண்டதைத் தொடர்ந்து 50 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள Tanjong Pagar Plaza புளோக் 4இல் கட்டடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 2:15 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீயணைப்பாளர்கள் நீர் பாய்ச்சும் குழாய்கள் கொண்டு தீயை அணைத்தனர். 5ஆம் மாடியில் இருந்த வீட்டின் படுக்கையறையிலுள்ள பொருள்களில் தீப்பற்றியதாகக் கூறப்பட்டது.

பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. பக்கத்து புளோக்கில் வசிக்கும் பெண் ஒருவர் தீ மிகப்பெரிதாக இருந்தது என்றும் தீயணைப்பாளர்கள் விரைவாக வந்தனர் என்றும் கூறினார்.

சிங்கப்பூரில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து – 50 பேர் வெளியேற்றம் samugammedia சிங்கப்பூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் திடீரென தீ மூண்டதைத் தொடர்ந்து 50 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.இந்நிலையில் சிங்கப்பூரில் உள்ள Tanjong Pagar Plaza புளோக் 4இல் கட்டடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தீச்சம்பவம் குறித்து நேற்று மதியம் 2:15 மணியளவில் தகவல் கிடைத்ததாகச் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.தீயணைப்பாளர்கள் நீர் பாய்ச்சும் குழாய்கள் கொண்டு தீயை அணைத்தனர். 5ஆம் மாடியில் இருந்த வீட்டின் படுக்கையறையிலுள்ள பொருள்களில் தீப்பற்றியதாகக் கூறப்பட்டது.பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது. பக்கத்து புளோக்கில் வசிக்கும் பெண் ஒருவர் தீ மிகப்பெரிதாக இருந்தது என்றும் தீயணைப்பாளர்கள் விரைவாக வந்தனர் என்றும் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement