• May 20 2024

விசப்பாம்பு தீண்டி 6 மாத குழந்தை பரிதாபமாக பலி..! மட்டக்களப்பில் சோகச் சம்பவம் samugammedia

Chithra / Nov 24th 2023, 6:01 pm
image

Advertisement

 


ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றது. 

பாத்திமா புரத்தில் உள்ள தனது வீட்டில் வெற்றுத்தரையில் தூங்கிக்கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் பாம்பு தீண்டி இருக்கிறது. 

தாய்  காலை 7 மணி அளவில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்தார். 

குறித்த குழந்தை உயிரிழந்த நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது. 

வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே மேற்படி பாம்பு வீட்டினுள் நுழைந்து குழந்தையை தீண்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையை  தீண்டிய பாம்பை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . 

விசப்பாம்பு தீண்டி 6 மாத குழந்தை பரிதாபமாக பலி. மட்டக்களப்பில் சோகச் சம்பவம் samugammedia  ஆறு மாத குழந்தை ஒன்றை விசப்பாம்பு தீண்டியதால் பரிதாபகரமான முறையில் பலியான சம்பவம் இன்று (24) அதிகாலை மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்  பிரிவிலுள்ள ஒல்லிக்குளம் பற்றிமாபுரத்தில் இடம்பெற்றது. பாத்திமா புரத்தில் உள்ள தனது வீட்டில் வெற்றுத்தரையில் தூங்கிக்கொண்டிருந்த ஆறு மாத குழந்தையை பாம்பு பல இடங்களில் தீண்டியுள்ளதால் மரணம் ஏற்பட்டிருப்பதாக திடீர் மரண விசாரணை அதிகாரியின் பிரேத பரிசோதனைகளில் இருந்து தெரியவந்துள்ளது. தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த தனது குழந்தையை இன்று அதிகாலை மூன்று முப்பது மணி அளவில் பாம்பு தீண்டி இருக்கிறது. தாய்  காலை 7 மணி அளவில் மயக்க நிலையில் இருந்த குழந்தையை ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதித்தார். குறித்த குழந்தை உயிரிழந்த நிலையிலேயே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோதனையின் பின்னர் குழந்தை உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இக்னேஷ் அபிலாஷ் என்னும் 6 மாத ஆண் குழந்தையே இவ்வாறு பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளது. வீட்டின் அருகில் இருந்த காடுகளுக்குள் இருந்தே மேற்படி பாம்பு வீட்டினுள் நுழைந்து குழந்தையை தீண்டியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.குழந்தையை  தீண்டிய பாம்பை அயலவர்கள் அடித்துக் கொன்றுள்ளதுடன் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் . 

Advertisement

Advertisement

Advertisement