வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவிற்கான முன்னாயர்த்தக் கூட்டம் இன்று காலை இடம்பெற்றது.
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் மார்ச் மாதம் 3, 4ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இது தொடர்பான முன்னாயர்தக் கூட்டம் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலசுந்தரன் தலைமையில் மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் பிரகாரம் எதிர்வரும் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவில் 4500 இலங்கை பக்தர்களையும், 3500 இந்திய பக்தர்களையும், மதகுருமார்கள் உள்ளடங்களாக 1000 சிறப்பு அதிதிகளையும்அனுமதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக் கூட்டத்தில் யாழ் இந்தியத் துணைத் தூதரக அதிகாரி ராம்மகேஸ் , குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளார் வடக்கு மாகாண கடற்படைத் தளபதி தென்னக்கோன் மற்றும் யாழ். மாவட்ட கடற்படைத் தளபதி, இராணுவத்தினர், பொலிசார், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.