• May 09 2024

ஆசிரியர் தினத்தில் முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி..! நடந்தது என்ன? samugammedia

Chithra / Oct 6th 2023, 3:54 pm
image

Advertisement

 


ஆசிரியர் தினமான இன்று பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கேக் சாப்பிட்டு முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 7ஆம் தர மாணவர்கள் ஒன்பது பேர் வத்துப்பிட்டிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வாமை காரணமாக  இன்று பிற்பகல் குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊராபொல மத்திய மகா வித்தியாலயத்துக்கு  கேக் கொண்டு வரப்பட்டு ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டது.

இதையடுத்து மாணவர்களும் கேக் சாப்பிட்ட பின், முகத்திலும், உடலிலும் கேக்கை பூசி மகிழ்ந்தனர்.

அப்போது ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கேக்கை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதா? அல்லது கேக்கை முகத்தில் பூசியதால் பாதிக்கப்பட்டனரா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என தெரியவருகின்றது.  


ஆசிரியர் தினத்தில் முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 9 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி. நடந்தது என்ன samugammedia  ஆசிரியர் தினமான இன்று பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கேக் சாப்பிட்டு முகத்தில் கேக் பூசி மகிழ்ந்த 7ஆம் தர மாணவர்கள் ஒன்பது பேர் வத்துப்பிட்டிவல ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஒவ்வாமை காரணமாக  இன்று பிற்பகல் குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஊராபொல மத்திய மகா வித்தியாலயத்துக்கு  கேக் கொண்டு வரப்பட்டு ஆசிரியர்களுக்கு பரிமாறப்பட்டது.இதையடுத்து மாணவர்களும் கேக் சாப்பிட்ட பின், முகத்திலும், உடலிலும் கேக்கை பூசி மகிழ்ந்தனர்.அப்போது ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கேக்கை சாப்பிட்டதால் மாணவர்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டதா அல்லது கேக்கை முகத்தில் பூசியதால் பாதிக்கப்பட்டனரா என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என தெரியவருகின்றது.  

Advertisement

Advertisement

Advertisement