• Sep 20 2024

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு..!

Sharmi / Sep 18th 2024, 9:33 pm
image

Advertisement

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. 

மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த முதலாம் திகதி குறித்த குழந்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.

இந்நிலையில், தாயார் குழந்தைக்கு பாலூட்டிய வேளை பால் வெளியே வந்தது. 

இதனால் குழந்தைக்கு இரைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.

இந்நிலையில், குழந்தை கடந்த 16 ஆம் திகதி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகள் இன்றையதினம் நடைபெற்ற நிலையில், கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு. யாழில் பிறந்து 16 நாட்களேயான ஆண் குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. மின்சார நிலைய வீதி, சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கடந்த முதலாம் திகதி குறித்த குழந்தை தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்துள்ளது.இந்நிலையில், தாயார் குழந்தைக்கு பாலூட்டிய வேளை பால் வெளியே வந்தது. இதனால் குழந்தைக்கு இரைப்பை குழாயில் அடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகித்து தாயும் சேயும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டனர்.இந்நிலையில், குழந்தை கடந்த 16 ஆம் திகதி  உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.உடற்கூற்று பரிசோதனைகள் இன்றையதினம் நடைபெற்ற நிலையில், கிருமித் தொற்றே மரணத்திற்கான காரணம் என தெரியவந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement