நெல்லியடி விழுந்த ஆலடி பகுதியில் அரச உத்தியோக பெண் ஒருவரின் 2 பவுண் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கடந்தவாரம் அறுத்து சென்றுள்ளனர்.
அதன் அடிப்படையில் நெல்லியடி புலனாய்வாளர்களுக்கு கிடைத்த தகவலின் படி சாவகச்சேரியை சேர்ந்த 23 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நெல்லியடி பொலிசார் சந்தேக நபரை பருத்தித்துறை நீதி மன்றிக்கு முற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.