மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இருதயபுரம் கிராமத்திலுள்ள தனியார் காணியொன்றுக்குள் முதலையொன்று இன்று திங்கட்கிழமை உட்புகுந்துள்ளது.இதனையடுத்து கிராம மக்கள் அச்சமடைந்தனர்.
அருகிலுள்ள வாய்க்கால் ஒன்றிலிருந்தே இம் முதலை குடியிருப்பு காணியை நோக்கி வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முதலையை பிரதேச மக்கள் பாதுகாப்பாக மீட்டு நீர் நிலைக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.