• Nov 13 2025

கடலில் மூழ்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி; இருவரின் உயிரைக் காப்பாற்றிய படையினர்

Chithra / Nov 11th 2025, 9:46 am
image


மாத்தறை - திக்வெல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மதியம் திக்வெல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, பொலிஸ் உயிர்காக்கும் படையினர், அவரை மீட்டு பதிகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 63 வயதான செக் குடியரசைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி என தெரியவந்துள்ளது.

குறித்த நபர் தனது மனைவி மற்றும் இருவருடன் கடலில் நீந்தச் சென்றதாகவும், இதன்போது அவருடன் மேலும் இருவர் நீரில் மூழ்கியதாகவும் பொலிஸ் உயிர்காக்கும் படையினர் அவர்களின் உயிரைக் காப்பாற்றியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலில் மூழ்கிய வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பலி; இருவரின் உயிரைக் காப்பாற்றிய படையினர் மாத்தறை - திக்வெல்ல கடலில் மூழ்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மதியம் திக்வெல்ல கடலில் நீராட சென்ற வெளிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.இதன்போது, பொலிஸ் உயிர்காக்கும் படையினர், அவரை மீட்டு பதிகம வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் மாத்தறை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டபோது உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவர் 63 வயதான செக் குடியரசைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி என தெரியவந்துள்ளது.குறித்த நபர் தனது மனைவி மற்றும் இருவருடன் கடலில் நீந்தச் சென்றதாகவும், இதன்போது அவருடன் மேலும் இருவர் நீரில் மூழ்கியதாகவும் பொலிஸ் உயிர்காக்கும் படையினர் அவர்களின் உயிரைக் காப்பாற்றியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement