• May 03 2024

பலரை பலியெடுத்த கோர விபத்து! சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! samugammedia

Chithra / Jul 10th 2023, 10:36 pm
image

Advertisement

 பொலன்னறுவை - மனம்பிட்டி பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரை இன்று பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, மனம்பிடிய பகுதியில் நேற்று விபத்திற்குள்ளாகியிருந்தது.

இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 


பலரை பலியெடுத்த கோர விபத்து சாரதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு samugammedia  பொலன்னறுவை - மனம்பிட்டி பகுதியில் நேற்று விபத்துக்குள்ளான பேருந்தை செலுத்திய சாரதிக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபரை இன்று பொலன்னறுவை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இதன்போது, அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்து, மனம்பிடிய பகுதியில் நேற்று விபத்திற்குள்ளாகியிருந்தது.இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 8 பெண்களும்,3 ஆண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Advertisement

Advertisement

Advertisement