• May 18 2024

தமிழர் பகுதியில் சற்றுமுன் பாரிய விபத்து..! பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல் Samugammedia

Chithra / Jun 13th 2023, 9:39 am
image

Advertisement

கிளிநொச்சி -  முல்லையடி பகுதியில் இன்று காலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முல்லையடி பகுதியில் ஏ9வீதி் அருகே மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மாதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் எவருக்கும் எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

வாகனம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இச் சம்பவமானது இன்று (13) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


தமிழர் பகுதியில் சற்றுமுன் பாரிய விபத்து. பாதிப்பு தொடர்பில் வெளியான தகவல் Samugammedia கிளிநொச்சி -  முல்லையடி பகுதியில் இன்று காலை பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த கனரக வாகனம் ஒன்று முல்லையடி பகுதியில் ஏ9வீதி் அருகே மின்சார கம்பத்துடன் மோதி அருகில் இருந்த வீட்டு மாதில் மேல் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த சம்பவத்தில் எவருக்கும் எந்தப் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவருகின்றது.வாகனம் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இச் சம்பவமானது இன்று (13) காலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது எனவும் மேலதிக விசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement