ஜப்பானிய குடிமக்களுக்கு புன்னகைக்க கற்றுக்கொடுக்கும் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது குறித்து வெளியிடப்பட்ட வெளிநாட்டு அறிக்கையில் ஜப்பானிய குடிமக்கள் கொவிட் தொற்றுநோய் காரணமாக முகமூடிகளை அணிந்திருந்தனர்.
மேலும் அந்த நேரத்தில் புன்னகைக்காததால் முக தசைகளில் ஏற்படும் எதிர்மறையான விளைவைக் குறைப்பதே இதன் நோக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த புன்னகை பயிற்சி வகுப்புகளுக்கான தேவை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.