• Sep 08 2024

கிளிநொச்சியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் பூங்கா...! எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்...!

Sharmi / May 18th 2024, 4:13 pm
image

Advertisement

கிளிநொச்சியில் படையினரால் நிர்மாணிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று(18)  முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுத்த வெற்றி நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் இராணுவத்தினரால் சிறுவர் பூங்கா அமைக்கப்படும் நிலையில் அதற்கு எதிர்ப்பு  தெரிவித்து இன்று(18) மாலை 2.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தின் போது அவ் விடத்திற்கு விரைந்த பொலிசார் போராட்டத்துக்கான காரணத்தை கேட்டு அமைதிப்படுத்த முனைந்தனர். இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது.

தொடர்ந்து, வீதி போக்குவரத்துக்கு இடமளித்து போராட்டம் செய்ய பொலிசாரால் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பகுதியை சுற்றியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதான வாயிலை மறித்து அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



கிளிநொச்சியில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்படும் பூங்கா. எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம். கிளிநொச்சியில் படையினரால் நிர்மாணிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று(18)  முன்னெடுக்கப்பட்டது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கிளிநொச்சி டிப்போ சந்தியில் அமைந்துள்ள இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள யுத்த வெற்றி நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் இராணுவத்தினரால் சிறுவர் பூங்கா அமைக்கப்படும் நிலையில் அதற்கு எதிர்ப்பு  தெரிவித்து இன்று(18) மாலை 2.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டத்தின் போது அவ் விடத்திற்கு விரைந்த பொலிசார் போராட்டத்துக்கான காரணத்தை கேட்டு அமைதிப்படுத்த முனைந்தனர். இதன்போது அமைதியின்மை ஏற்பட்டது.தொடர்ந்து, வீதி போக்குவரத்துக்கு இடமளித்து போராட்டம் செய்ய பொலிசாரால் அனுமதிக்கப்பட்டது. தொடர்ந்து இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள குறித்த பகுதியை சுற்றியவாறு போராட்டத்தில் ஈடுபட்டதுடன், பிரதான வாயிலை மறித்து அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement